நீரிழிவை கட்டுப்படுத்தும் அசோகா மரம் (நெட்டிலிங்கம்)
- எம் இல்லங்களின் சுற்றுசுவர் பகுதியை ஒட்டி அழகுக்காகவும், மறைவிற்காகவும் அசோகா மரம் வளர்க்கப் படுவதை அறிந்திருக்கிறோம். ஆனால் அந்த அசோகா மரம் மருத்துவ குணத்தைக் கொண்டிருக்கிறது என்று எத்தனைபேருக்குத் தெரியும். இதன் மருத்துவ குணத்தை அறிந்த பின் இந்த மரத்தை மேலும் அனேகமானவர்கள் வளர்க்கக்கூடும். இந்த அசோகா மரத்தைப் பற்றிய ஒரு உண்மையைச் சொல்கிறோம். இந்த மரம் எம்மண்ணினை தாயகமாக் கொண்டது. இங்கிருந்து தான் இந்தியா உள்ளிட்ட பல தேசங்களுக்கு பிரயாணித்தது.
மருத்துவத்தில் அதிலும் குறிப்பாக சித்த மருத்துவத்தில் இதன் பெயர் நெட்டிலிங்கம். கோடைக்காலத்தில் பலருக்கு வியர்வை பெருக்கெடுத்து ஓடும். அவரிடம் நின்று பேசக்கூட பலரும் தயங்குவர்.
ஏனெனில் அவரிடமிருந்து வெளி யாகும் வியர்வை துர்நாற்றம். இந்த துர்நாற்றத்திற்கு முக்கிய காரணம் வியர்வையில் வளரும் பூஞ்சைகள் தான். இந்த பூஞ்சைகளுக்கு ஈரம் என்றால் கொண்டாட்டம் தான். வியர் வையை உணவாக கொண்டு வாழும் இந்த பூஞ்சைகள் முதலில் உடலில் அரிப்பை ஏற்படுத்தும்.
நாளடைவில் அதுவே படையாக மாறிவிடும். இவற்றை நீக்கவேண்டும் என்றால் பல துறை மருத்துவர்களை நாடிச் சென்று அவர்கள் எழுதி தரும் களிம்புகளையோ அல்லது மருந்துகளையோ பூசிக்கொள்ளவேண்டாம். வீட்டின் முன் பகுதியில் அழகுக்காக வளர்ந்திருக்கும் நெட்டிலிங்கம் மர இலைகளே போதுமானது. அதாவது அசோகா மர இலைகளே போதுமானது.நெட்டிலிங்கத்தின் பட்டை அல்லது இலைகளை (ஐந்து முதல் பத்து இலைகள்) இரண்டு கோப்பை தண்ணீர் ஊற்றி, ஒரு டம்ளர் தண்ணீராக வரும் வர கொதிக்கவைக்கவேண்டும். பிறகு அந்த தண்ணீரை வடிகட்டி குடித்து வந்தால் வயிற்றில் இருக்கும் கிருமிகள் அழிவதோடு, இந்த வியர்வையிலிருந்து வரும் துர் நாற்ற தொல்லைகளிலிருந்தும் விடுபடலாம். அதே போல் நெட்டிலிங்கத்தின் பட்டையை உரித்து எடுத்து வந்து நீரில் போட்டு, நன்றாக கொதிக்கவைத்து, வற்றிய பிறகு அந்த வடிகட்டிய நீரை படை உள்ள இடங்களில் தடவி வர, படை மறைந்து வருவதை கண்கூடாகப் பார்க்கலாம்.இந்த நெட்டிலிங்கத்தின் இலைக்கு புற்றுநோயை விரட்டும் தன்மையும், ஹெச் ஐ வி எனும் உயிர்கொல்லி நோயின் வீரியத்தை கட்டுப்படுத்தும் தன்மையும் இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கிறது. அதே போல் காய்ச்சல் தருணத்தில் உடலின் வெப்பத்தை குறைக்கும் தன்மையும் இந்த அசோகா இலைக்கு உண்டு.
இந்த இலைச்சாற்றை நீரிழிவால் பாதிக்கப்பட்டவர் களுக்கு ஒரு அருமருந்து என்றேச் சொல்லலாம். சர்க்கரையின் அளவு அதிகரித்துவிட்டதோ என் நீங்கள் கருதி னால் இரண்டு இலைகளை எடுத்து அதிலிருந்து சாறெடுத்து அருந்தலாம். அருந்திய பின் பரிசோதித்தால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருப்பதை அறியலாம். அதே தருணத்தில் ஓரிரு இலைகளைத்தான் எடுத்து சாறெடுத்து அருந்தவேண்டும். ஏனெனில் நெட்டி லிங்கத்தின் இலைகள் அதிக குளுமையானவை. அதிகமாக குடித்தால் உடல் வெப்பத்தை ஒரேயடி யாக குறைத்து ஜன்னியை வரவழைத்துவிடும்.
ஒரு சிலருக்கு பனிக்காலத்தின் போது வறட்டு இருமல் அதிகரிக்கும். இத்தகைய தருணத்தில் அசோகா மரத் தின் பட்டையை போட்டு கஷாயம் தயாரித்து அருந்தி னால் இருமல் குறையும். ஒரு வாரம் வரை தொடர்ந்து குடித்தால் இருமல் மறைந்துவிடும். இந்த இலையில் இருக்கும் வேதிப்பொருள்கள் எம் உடலில் தேவையற்ற பாக்டீரியாக்களை அழித்து, அண்ட விடாமல் செய்து விடும்.- டொக்டர்.
ஜி. சிவராமன், M.D., (Sidha)